கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு.

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
ஜா எல பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் 17 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.