காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குருநாகல் – எஹட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கத்துருவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் எஹட்டுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

இவர் நேற்று அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்துக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.