யாழ். தெல்லிப்பளையில் மகளிர் இல்லத்தில் யுவதி உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.