இலங்கையில் வறுமையின் அபாயம் அதிகரிப்பு! – உலக வங்கி எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரமானது ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைக்கான அபிவிருத்தி அறிக்கையை வெளியிடும்போதே இந்தத் தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகளைக் காட்டி வருகின்றது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நாட்டில் வறுமையின் அபாயம் மீண்டும் அதிகரித்து வருகின்றது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையைப் பெற்றிருந்தாலும், நாட்டில் வறுமை அல்லது வங்குரோத்து நிலை அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.