களனி ஆற்றில் ஆணின் சடலம் – சிதைவடைந்த நிலையில் மீட்பு.

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி 6 அங்குல உயரம் கொண்டவர் எனவும், நீல நிற ரி – சேர்ட் அணிந்திருந்ததோடு, இடுப்புக்குக் கீழே நிர்வாணமாக இருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உடல் சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.