9 ஆயிரம் மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இன்று தெரிவித்தார்.

மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் கூறினார்.

கொழும்பில் விசேட ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும்போதே அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 77 ஆயிரத்து 588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.