பதுளையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபப் பலி – மேலும் ஐவர் காயம்.

பதுளை, எட்டம்பிட்டி , கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணும் காயமடைந்தவர்களும் கடும் மழை காரணமாக தோட்டப் பகுதியில் இருந்தபோதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.