இதுவரையில் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ்.

2ஆம் அலைமூலம் இதுவரையில் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்களுள் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சுமார் 3 ஆயிரம் பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மாறாக பொலிஸாருக்கிடையில் சமூகதொற்று இல்லை என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, முகக்கவசம் அணிகின்றபோதிலும் சமூகஇடைவெளியை மக்கள் பின்பற்றுவதில்லை. தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும்பட்சத்தில் கைது செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.