மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு

நீண்டகால கைதிகள், மரண தண்டனை கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்ப்பதற்கு இந்த திட்டம் ஒரு தீர்வாகும்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கவும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறைகளில் மொத்தம் 1116 கைதிகள் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றனர்.
ஊடக தகவல்களின்படி, கைதிகளின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.