இலங்கையில் ‘கொரோனா’ சாவு 130

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் சாவடைந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று அறிவித்தார்.
பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கத்தால் இதுவரை 117 பேர் சாவடைந்துள்ளனர்.
அதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.