வாழ்வாதாரமாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

வாழ்வாதாரமாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்ட செயலக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தையல் துறைசார் பயிற்சி நெறிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரத்தை விருத்தி செய்து தொழில் முயற்சிகளை ஊக்கப்படத்தும் முகமாக இன்று(05) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த தையல் இயந்திரங்களை மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்துபின் கருத்துத் தெரிவிக்கையில், இத் தையல் இயந்திரங்களை வெறுமனே வீட்டுத்தேவைகளுக்குரிய மூலப்பொருட்களாக வைத்திராது வினைத்திறனாக தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதனூடாக அடுத்தவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கி புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஆறு தொழில்முனைவோருக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.