இலங்கையில் வசிக்கும் பழங்குடியினரின் பசியைத் தீர்க்க உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

இலங்கையில் வசிக்கும் பழங்குடியினரின் பசியைத் தீர்க்க லண்டனில் வசிக்கின்ற கந்தப்பிள்ளை திலீபனின் நிதி அனுசரனையுடன் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

நேற்றைய தினம் (12) மஹியங்கனை, தபானை பிரதேசத்தில் வசிக்கின்ற பழங்குடியினருக்கு சுமார் 500 ற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பயணக் கட்டுப்பாடு காரணமாக உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்துள்ளனர்.

பழங்குடி மக்களின் பயணத்தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக தெரிவித்து இலங்கைக்கான ஆதிவாசிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் புலம்பெயர் உறவான க.தீலிபன் அவர்களால் இவ் உதவியை மாத்தல சுனித்த தேரர் மூலம் இவ் உதவியை நேரடியாக சென்று மேற்கொள்ள முடிந்தது.

அதனடிப்படையில் பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட தேரர் தமது வழிகாட்டலில் இவ் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

தங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைத்த தேரர் தலைமையிலான குழுவினருக்கு மற்றும் இவ் உதவியை மேற்கொள்ள நிதி அனுசரனை செய்த கந்தப்பிள்ளை தீலிபன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் மேலும் இது போன்ற தமது மக்கள் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் மேலும் கேட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.