கொழும்பில் குண்டு வெடிப்பு என சமூக ஊடகங்களில் தவறான செய்தி : அஜித் ரோஹண

மிரிஹான, நுகேகொடை, கல்கிஸ்சை, தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்புகள் இடம் பெறுவதாக தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சை எஸ்எஸ்பி நடத்திய விசாரணையில் , 2019 ஏப்ரல் 25 அன்று ஒரு நபர் அனுப்பிய செய்தியை , மீண்டும் பரப்பப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பார்த்து எவரும் பீதியடையவோ அல்லது எதிர்வினையாற்றவோ தேவையில்லை என அவர் மேலும் கூறினார்.

கல்கிஸ்சை எஸ்எஸ்பியின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்பு குழு இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது என் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.