பயணக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கூறுகின்றது.

அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.