வெளிநாட்டு இருப்புக்களில் உள்ள பணத்தை வழங்க முடியாது : மத்திய வங்கி பசிலிடம் அறிவித்தது

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம், வெளிநாட்டு இருப்புக்களில் உள்ள பணத்தை பணச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அமைச்சரவைக்கு அறிவித்தார்.
பசில் ராஜபக்ஷ முந்தைய கருவூல பில்களில் 10% பெறப்பட்டுள்ளதாகவும், இப்போது அது 90% ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இருப்புக்களிலிருந்து பணம் எடுக்கப்பட வேண்டுமானால், அதற்காக பணத்தை மேலும் அச்சடிக்க வேண்டி வரும் என அவர் மேலும் கூறியுள்ளார்