வடக்கில் 5 குழந்தைகள் உட்பட மேலும் 144 பேருக்குக் கொரோனாத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் நேற்று ஐந்து குழந்தைகள் உட்பட 144 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 04 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்றுக்கும், ஒரு வயதான பெண் குழந்தை ஒன்றுக்கும், நான்கு வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் பிறந்து 10 மாதமேயான குழந்தை ஒன்றுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒரு வயதும் 10 மாதமுமான பெண் குழந்தை ஒன்றுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.