கொரோனா தொற்றினால் மற்றொரு வைத்தியரும் பலி

குருநாகல் மாகாண பொது மருத்துவமனையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (18) காலமானார்.
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த 57 வயதான வைத்தியர் சுதத் பண்டார, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார், எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.