கப் – மோ.சைக்கிள் மோதல்! – இளைஞர் ஒருவர் மரணம்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளிய வீதி, புலதிவயல் பகுதியில், கப் ரக வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.
புத்தளம், புலதிவயல் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.