உலக அழகிப் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக புஷ்பிகா டி சில்வா தெரிவிப்பு.

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அதில் கலந்து கொண்ட புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார். அந்த அநீதிகள் இல்லாமல் இருந்திருந்தால் போட்டியில் வென்றிருப்பேன் என்கிறார்.
இதனைக் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
மனிதர்களாகிய நம் அனைவருக்கும் மேலாக கடவுளும் இயற்கையும் எம்மைச் சோதிக்கும் நேரம் இது. கொரோனா போன்றவற்றின் மூலம் அமைதி, தியாகம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய தருணம் இது.
அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த உலக திருமண அழகி போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நான் இறுதிச் சுற்று வரை வெற்றிகரமாகப் போட்டியிட்டேன். மேலும் சில தரப்பிலிருந்து அநீதி இழைக்கப்பட்டது. வழக்கம் போல் எனக்கு கிடைக்க வேண்டிய அந்த வெற்றியைப் பறித்த மக்களை மன்னித்து விட்டேன்.
ஆனால் கடவுளின் முடிவை மாற்ற முயற்சித்த ஒரு மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இன்று இயற்கை தன் தீர்ப்பை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. நான் கடவுள் பக்தி உள்ளவள். நான் இயற்கைக்கு விசுவாசமானவள். நான் எப்போதும் என் நம்பிக்கைகளில் பாதுகாக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன். அது அப்படியே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.