ஆர்ப்பாட்ட களத்தில் நின்ற ராப்பர் ஷிராஸ் யூன்ஸ் மரணம்

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ராப்பர் ஷிராஸ் யூன்ஸ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் ஆர்ப்பாட்ட களத்தில் ஒரு பாடலைப் பாடி முடித்த சிறிது நேரத்தில், இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு , ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.