யாழ். கீரிமலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை, புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது – 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.