வவுனியாவில் போதைப்பொருளுக்கு முடிவுகட்டக் களமிறங்கியது எஸ்.ரி.எப்!. – விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம்.

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் களமிறங்கியுள்ளனர். அத்துடன் வவுனியாவுக்குரிய விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விசேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.
வவுனியாவில் பரவி வரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாகக் கட்டுப்படுத்தவே விசேட அதிரடிப் படையினர் களமிறங்கியுள்ளனர்.
அத்துடன் அறிவித்தல் வழங்க பின்வரும் விசேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.