துப்பாக்கி சூட்டில் சிக்கிய நான்கு வயது சிறுவன் பலி!

யக்கலமுல்ல மாகெதர பிரதேசத்தில் கடந்த 19ம் திகதி ஒரு வீட்டில் கறுவா அரைத்துக் கொண்டிருந்தவர் மீது நடத்திய துப்பாக்சி சூட்டின் மத்தியில் சிக்கிய 4 வயது சிறுவன் , கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30ஆம் திகதி) அதிகாலை மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணேபுர ஹேவாவைச் சேர்ந்த அனுத் சத்சரா என்ற நான்கு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

கறுவா அரைத்துக்கொண்டிருந்த நபரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கறுவா அரைத்துக் கொண்டிருந்தவர் உயிரிழந்ததுடன் அருகில் இருந்த இச்சிறுவனும் சுடப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த வெடிக்காரகே சமன் குமார என்ற 33 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கரந்தனியா பிரதேசத்தில் கொலை வழக்கு ஒன்றில் சந்தேகநபர் என்பதுடன் , நீதிமன்றில் இருந்து பிணை பெற்று யக்கலமுல்ல மககெதர பகுதியிலுள்ள வீடொன்றில் இலவங்கப்பட்டை அரைத்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் , அவரை நோக்கி டி.56 கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குழந்தையின் கால் மற்றும் வயிற்றில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டிருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் யக்கலமுல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.