வெளிநாடு செல்லவிருந்த பருத்தித்துறை இளைஞரும் வவுனியா விபத்தில் பலி!

வவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார்.
பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.
வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக குறித்த பஸ்ஸில் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.