SJB-NPP , MPக்கள் தெரண நேரலையில் கழுதை என கடும் வாக்குவாதம் (வீடியோ)

நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘வாத பிட்டிய’ நிகழ்ச்சியின் போது, ​​SJB மற்றும் NPP பிரதிநிதிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மஹிந்த ஜயசிங்கவிற்கு எதிராக ஹேஷா விதானகே குற்றச்சாட்டை முன்வைத்தபோதே, SJB சார்பில் பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, NPP மஹிந்த ஜயசிங்கவை பார்த்து 20 ஆண்டுகளாக , அரச சம்பளத்தை வாங்கிக் கொண்டு எந்தப் பாடசாலையிலும் கற்பிக்கவில்லை என சொன்ன போது , இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பமானது.

தாம் எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாட்டையும் செய்யவில்லை எனவும், இந்த நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தொழிற்சங்க உரிமைகளை மட்டுமே அனுபவித்துள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வாக்குவாதம் தீவிரமடைந்தபோது, ​​மஹிந்த ஜயசிங்க, ஹேஷா விதானகேவை கழுதை என திட்டினார். விவாதம் கைகலப்பின்றி சமரசமானது.

Leave A Reply

Your email address will not be published.